அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி,  அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை வழங்கினார். 

அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி...

புதுச்சேரியில் நடந்தமுடிந்த சட்டபேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி பதவியேற்று கொண்டார். இதனைதொடர்த்து முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த  27 ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக லஷ்மிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்காவும், பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணகுமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பாஜக இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை, முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ள இலாகாக்கள் குறித்த பட்டியலை வழங்கினார். மேலும் பட்டியலுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்பு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.