ஆர்.எஸ்.எஸ். பேரணி; உயர்நீதிமன்றத்தில் மனு!

தமிழத்தின் தென் மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு விஜயதசமி பண்டிகையை ஒட்டி  ஆர்எஸ்எஸ் தரப்பில் மதுரை உள்ளிட  14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி அந்த அந்த மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இம்மனுவில், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தப்பேரணியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படையினர் காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை,  தொப்பி அணிந்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடத்தில் பேரணியாக செல்ல அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தமனு விரைவில் பட்டியலிடப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிக்க: அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்!