முதலில் நோ சொன்ன காவல்துறை...இப்போ பச்சைக்கொடி காட்டியுள்ளது!

முதலில் நோ சொன்ன காவல்துறை...இப்போ பச்சைக்கொடி காட்டியுள்ளது!

ஆர்.எஸ்.எஸ். பேரணியை நவம்பர் 6ஆம் தேதி நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

அக்டோபர் 2 அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம்:

கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் இந்தியா 75 வது ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் 50 இடங்அளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

அனுமதி மறுத்த காவல்துறை:

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக கட்சி, அதே நாளில் சமூக நல்லிணக்க பேரணி என்ற மனித சங்கிலி  ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தது. ஒரே நாளில் இரண்டு ஊர்வலமும் நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அந்த இரண்டு ஊர்வலங்களுக்கும் தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதையும் படிக்க: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று சொன்னேன்...!

காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்:

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது. உத்தரவை மீறி ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்ட டிஜிபி:

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு அனுமதி வழங்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.