"ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி!

"ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி!

ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்படும் ராகுல் காந்தி தங்களது கொள்கை என்ன என்பது குறித்தும், சீனாவிலிருந்து நம்முடைய நிலங்களை மீட்பது குறித்தும் பேச வேண்டுமே தவிர, எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டு ஜோக்கர் மாதிரி இருக்கக் கூடாது என்று கூறினார். 

இதையும் படிக்க : ”யாரை பார்த்தும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” - உதயநிதி

தொடர்ந்து பேசிய அவர், ராகுல்காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி விமர்சித்தார். 

முன்னதாக, 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.