முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு....!!

முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு....!!

 ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் நான்கு பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு  செய்யப்பட்டு விருதுநகர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் பிடிப்பதற்காக விருதுநகர் காவல் துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அவர் சட்ட ரீதியிலான ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் தலைமறைவாக இல்லை என விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு எடுத்துக்கொள்ளும்போது வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நேற்றைய தினம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.