கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் - இளைஞர்கள் சரமாரி தாக்குதல்

கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  - இளைஞர்கள் சரமாரி தாக்குதல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூரிலிருந்து ஆற்காடு நோக்கி அதிவேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மேல்விஷாரம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இந்நிலையில் காரில் இருந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரு சக்கரவாகனத்தில் வந்த இளைஞர் உடனடியாக செல்போன் மூலமாக தனது நண்பர்களை வரவழைத்து காரில் வந்த நபர்கள் சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.