நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த சிலம்பம் சுற்றும் சாதனை போட்டி!!

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த சிலம்பம் சுற்றும் சாதனை போட்டி!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று சிலம்பம் சுற்றும் சாதனை போட்டி நடந்தது.

இந்தியன் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் 5 வயது முதல் 55 வயது வரை உள்ள 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பத்து மணி நேரம் 10 நிமிடங்கள் 10 நொடிகள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பெற இந்த நிகழ்ச்சி நடந்தது.

குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள் சிறுவர்கள் செல்போன் உபயோகிப்பதில் இருந்து தவிர்ப்பது போன்ற பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி இந்த சிலம்பம் சுற்றும் போட்டிகள் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.