மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டுத்தாருங்கள்... கண்ணீர் மல்க மனு கொடுத்த மூதாட்டி...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 80 வயது மதிக்கத்தக்க சின்னம்மாள் என்கிற மூதாட்டி தனது ஐந்து ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்தார்.

மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டுத்தாருங்கள்... கண்ணீர் மல்க மனு கொடுத்த மூதாட்டி...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 80 வயது மதிக்கத்தக்க சின்னம்மாள் என்கிற மூதாட்டி தனது ஐந்து ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்தார். அவர் அளித்த மனுவில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மூங்கம்பட்டி அடுத்து பாளேத்தோட்டம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் கந்தசாமி மரணம் அடைந்த  நிலையில் எனது சொந்த உழைப்பில் 5 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தேன். எனது பிள்ளைகளான ஆறுமுகம், நாகராஜ், விஜயகுமார், ஆகிய மூன்று பேர்கள் மீது நான் உழைத்து சம்பாதித்து வாங்கிய 5 ஏக்கர் நிலத்தை தான செட்டில்  பத்திரம் மூலமாக எனது பிள்ளைகள் பெயரில் பதிவு செய்து கொடுத்தேன். இதில் ஆறுமுகம் நாகராஜ் ஆகிய இருவர் காலமான  நிலையில் விஜயகுமார் மற்றும் அவர்களின் மகன்கள் மனைவி எனது பேரன்கள் பழனிவேல் மகாலிங்கம் மகாலிங்கம் மனைவி சத்தியா ராணி அவரது மகன் அருண் சுரேந்தர் ஆகியோர் தற்போது அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். 

நான் சுயமாக உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலத்தை எனது பிள்ளைகள் அவரது மகன்கள் ஆகியோர் என்னை கடைசி வரையில் நன்றாக பார்த்து கவனித்துக் கொள்வார்கள் என்கிற நோக்கத்தில் தான் தான பத்திரம் செய்து வைத்தேன்.  ஆனால் மேற்கண்ட எனது மகன் மற்றும் அவர்களது மகன்கள் சேர்ந்து கொண்டு வயதான என்னை சரியாக கவனிப்பதில்லை தகாத வார்த்தைகளில் பேசுவதுடன் அவ்வப்போது என்னை தாக்கி வருகின்றனர் சாப்பிட உணவுகள் கூட வழங்குவது இல்லை. ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

தற்போது நிர்க்கதியாக வாழ வழியின்றி சாலையோரம் ஒரு குடிசையில் தங்கி தென்னை ஒலையில் துடப்பம் செய்யும் வேலை செய்து பிழைக்கிறேன். எனவே என்னை நடுத்தெருவில் துரத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் எழுதி வைத்த தான பத்திர ஆவணத்தை ரத்து செய்து எனது 5 ஏக்கர் நிலத்தை மீட்டு தர வேண்டும்  என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பெற்ற மகன் மற்றும் பேரன்களால் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட 80 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் நீதிகேட்டு மனு அளிக்க அந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் காண்போர் கண் கலங்கினர்.