மாதம் இருமுறை மட்டுமே கைதிகளுடன் உறவினர்கள் சந்திக்கலாம்!!

கொரோனா பரவல் எதிரொலி - மாதம் இருமுறை மட்டுமே கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு

மாதம் இருமுறை மட்டுமே கைதிகளுடன் உறவினர்கள் சந்திக்கலாம்!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, சிறைவாசிகளைக் காண மாதத்திற்கு இரு முறை மட்டுமே நேர்காணல் நடத்தப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மாதம் இரு முறை மட்டுமே சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்கலாம் என்றும், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணலுக்கான நேரம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணலின்போது பார்வையாளர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்றும், சிறைவாசிகளைக் காண வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கொரோனா நெகட்டீவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் எனவும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள கிளைச் சிறைகள் மற்றும் சிறப்பு கிளைச் சிறைகளில் நேர்காணலுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.