அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. தமிழகத்தில் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!!

கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. தமிழகத்தில் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் 22 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதாகவும், இதில் பிஏ4 வகை 7 பேருக்கும், பிஏ5 வகை 11 பேருக்கும் பரவியுள்ளதாகவும் சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் மூலம் அது பரவும் ஆபத்து உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாம்கள் நாளை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.