மின் இணைப்பை மாற்ற ரூ.5,000 லஞ்சம்; உதவி மின் செயற்பொறியாளர் கைது...!

மின் இணைப்பை மாற்ற  ரூ.5,000 லஞ்சம்;   உதவி மின் செயற்பொறியாளர் கைது...!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மின் இணைப்பை மாற்றிக் கொடுக்க 5 ஆயிரம் ரூபாய்  லஞ்சம் வாங்கிய உதவி மின் செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சிட்டாம்பூண்டி மின் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் அரவிந்தன் என்ற விவசாயி வசித்து வருகிறார். 

இவர் தனது விவசாய கிணற்றில் இருக்கும் மின் இணைப்பை, போர் அமைப்பதற்கான மின் இணைப்பாக மாற்ற செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார்.  அப்போது மின் இணைப்பு மாற்றித்தருவதற்கு இதற்கு உதவி மின் செயற்பொறியாளர் ஜெகநாதன் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 

இதுகுறித்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பால்சுதர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அரவிந்தனிடம் இருந்து பணம் பெறும் போது மின்வாரிய அதிகாரி ஜெகநாதனை கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க   | பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுகவினர்...பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!