நேருக்கு நேர் சந்திக்கும் சசிகலா-எடப்பாடி பழனிசாமி!!  

தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் தற்போது உருவானது.

நேருக்கு நேர் சந்திக்கும் சசிகலா-எடப்பாடி பழனிசாமி!!   

தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் தற்போது உருவானது. 

அதிமுக-வின் மூத்த தலைவரும் அவைத்தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உடல்நலம் குறித்து கேட்டறிய தற்போது மருத்துவமனைக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், சசிகலாவும் அதிமுக அவைத்தலைவரான மதுசூதனின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இதன் காரணமாக தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்ட சசிகலாவும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சசிகலா இல்லை என்றும், அவர் என்ன பொய் சொன்னாலும் அதிமுகவை பிரிக்க முடியாது என பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.