அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு...

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு...

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சிப்பதாக கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் சசிகலா போனில் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில், ஒன்றும் கவலைப்படாதீங்க, கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம், கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன் என்று கூறினார். இந்த இரண்டு ஆடியோ தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார், அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது, ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.சசிகலா பேசும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள் என்ற கே.பி.முனுசாமி, ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.