அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பள்ளிக் கல்வித்துறை..! -அமைச்சர் தீவிரம்.! 

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பள்ளிக் கல்வித்துறை..! -அமைச்சர் தீவிரம்.! 

கல்வித்துறையில் கடந்த காலங்களில் புகாருக்குள்ளானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், கல்வி அலுவலர்கள் என்று புகாருக்குள்ளானவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு, பணியிட மாற்றம், இடை நீக்கம், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வித்துறை தீவிரம் காட்டுவதாகவும் பள்ளிக்கல்வித்துறையின் கட்டமைப்பை மறு சீரமைக்க முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பான சீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.