கட்டணம் செலுத்தாததால் தனிமைப்படுத்திய பள்ளி... விரக்தியில் விஷம் குடித்த 9ம் வகுப்பு மாணவி... 

பள்ளிக்கட்டணம் கட்டதாததால் தனிமைப்படுத்தப்பட்டதால் விரக்தியில் 9ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்தார்.

கட்டணம் செலுத்தாததால் தனிமைப்படுத்திய பள்ளி... விரக்தியில் விஷம் குடித்த 9ம் வகுப்பு மாணவி... 

தேனி மாவட்ம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்வரின் மகள் சுவாதிஸ்ரீ. இவர் ஆண்டிப்பட்டியில் செயல்படும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுவாதிஸ்ரீ பள்ளிக்கு சென்றார்.

அப்போது பள்ளி கட்டணம் கட்டும்படி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தாத காரணத்தால் புத்தகங்களும் வழங்கப்படவில்லை. பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் அவர் தனிமைபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவிரக்தியில் இருந்த சுவாதிஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுவாதிஸ்ரீயை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.