16 வது நாளாக தொடரும் தேடுதல் பணி..... ஆட்கொல்லி புலி இன்றாவது சிக்குமா ?

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் போக்கு  காட்டி வரும்  ஆட்கொல்லி புலியை பிடிக்க  பதினாறாவது  நாளாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

16 வது நாளாக தொடரும் தேடுதல் பணி..... ஆட்கொல்லி புலி இன்றாவது சிக்குமா ?

மசினகுடி சிங்காரா சாலையில் இரண்டு துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் தீவிரமாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள சிங்காரா சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வனத்துறையினரின் கண்ணுக்குச் சிக்காமல், ஆட்கொல்லி புலி போக்கு காட்டி வருகிறது.

புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள சிங்காரா சாலையில், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 16 வது நாளாக தொடரும் இந்த T 23 புலியின் தேடுதல் பணியானது சிங்கார , ஆச்சங்கரை, கல்லல்லா உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில் காடுகள், நீரோடைகள், உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்ந்து சிங்காரா, ஆச்சங்கரை, கல்லல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூங்கில் காடுகள், நீரோடைகள், உள்ளிட்ட பகுதிகளில் 65 கேமராக்கள், குழுவிற்கு தலா 8 பேர் வீதம் மொத்தம் 5 குழுக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.