நடிகை விஜயலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்ட சீமான்.. !

தன்மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் அளிக்கப்பட்டது. செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். 

ஆனால், அதன் பிறகும் சீமான் நேரில் ஆஜராகாததை அடுத்து இன்று மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை வாங்க மறுத்த சீமான், நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, சீமான் மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, தனக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு சீமான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதேபோல், தமிழர் முன்னேற்றப்படையை சேர்ந்த வீரலட்சுமிக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க   | ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வு: அண்ணாமலை கண்டனம்...!