சென்னையில் இருந்து சீனாவிற்கு கடத்த முயன்ற பஃபர் மீன்கள் பறிமுதல் ....!!

சென்னையில் இருந்து சீனாவிற்கு கடத்த முயன்ற பாதுகாக்கப்பட்ட மீன் வகையான பஃபர் மீன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து சீனாவிற்கு கடத்த முயன்ற பஃபர் மீன்கள் பறிமுதல் ....!!

சென்னை பன்னாட்டு விமான நிலைய சரக்கக முனையத்தில் இருந்து சீனாவிற்கு வீட்டில் வளர்க்கும் மீன்கள் கொண்ட ஏற்றுமதி செய்ய 13 பெட்டிகள் வந்து இருந்தன.  இந்த பெட்டிகள் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது இந்தியாவில் அழிந்து வரக்கூடிய பாதுகாக்கப்பட்ட மீன் வகையான பஃபர் மீன்களின் சிறிய குஞ்சுகள் இருந்தன. 

13 பெட்டிகளில் சுமார் 60 ஆயிரம் மீன்கள் இருந்தது தெரியவந்தது. இந்த மீன்கல் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் கேரளா, கர்நாடக ஆகிய பகுதிகளில் இருந்து எடுத்து கடத்த முயன்றது தெரியவந்தது. 

இந்த மீன்கள் நல்ல தண்ணீரில் தான் வாழும் என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பஃபர் மீன் குஞ்சுகளை கிண்டி வனத்துறை அதிகாரிகள் கிண்டி குழந்தைகள் பூங்காவில் ஒப்படைத்தனர். 

மேலும் மீன் குஞ்சுகளை கடத்தி ஏற்றுமதி செய்ய இருந்த முகவரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது போலியானது என தெரியவந்தது. இது பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.