செல்பி மோகம்....வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சங்கராபுரம் அருகே அருவியில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.  

செல்பி மோகம்....வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர் அருவியில் சுரேஷ் , வெங்கடேசன்,பூமிநாதன்,சதீஷ் ஆகிய நான்கு சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம் வாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ் என்பவர், அருவியன் கீழே இருந்த பாறையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கால் வழிக்கி தண்ணீரில் விழுந்த சுரேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் தீயணைப்புவீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம்அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது