ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாக செமஸ்டர் தேர்வு நடைபெறும்: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாக செமஸ்டர் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாக செமஸ்டர் தேர்வு நடைபெறும்:  உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தேர்வு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். நேரடி தேர்வுக்கு மாணவர்கள் ஒரு மாத காலம் அவகாசம் கேட்ட நிலையில் 2 மாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.