50 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார்...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன், உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
கடந்த 1969-ஆம் ஆண்டு பிப்ரவரியில், கருணாநிதியின் உதவியாளராகச் சேர்ந்த சண்முகநாதன், தொடர்ந்து 50 ஆண்டுகள் வரை அந்தப் பணியில் இருந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புளன்ஸ் மூலம் டிஎம்எஸ்ஸில்வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள்
கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், அவருடன் இருந்து எழுத்துப் பணியாற்றியவர் சண்முகநாதன். மேலும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, முக்கிய தலைவர்களை சந்திக்கும் நேரங்களிலும், அவருடனேயே இருந்தவர் சண்முகநாதன். இந்த நிலையில், சண்முகநாதன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்திற்காக டெல்லியில் தங்கியுள்ள திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோரும், சண்முகநாதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.