மது கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடை.. கோவையில் பரபரப்பு

கோவையில் மது கலந்து ஐஸ்கிரீம் தயாரித்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மது கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடை.. கோவையில் பரபரப்பு

கோவையில் மது கலந்து ஐஸ்கிரீம் தயாரித்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் அவின்நாசி சாலையில் ரோலிங் டாவ் காஃபே என்ற ஐஸ்கிரீம் கடை உள்ளது. அங்கு மது கலந்து ஐஸ்கிரீம் கலந்து விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உத்தரவின் பேரில் அங்குசென்ற உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, அங்கு இரண்டு மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காலாவதியான உணவு இருந்ததுடன், உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரம் இன்றி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அந்தக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.