தூத்துக்குடிக்கு வந்த சிந்துஷாஸ்ட்ரா நீர்மூழ்கி கப்பல்..! காரணம் என்ன.?

தூத்துக்குடிக்கு வந்த சிந்துஷாஸ்ட்ரா நீர்மூழ்கி கப்பல்..! காரணம் என்ன.?

தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை கப்பல் தளத்தில் நீர்மூழ்கிக் கப்பல் அதிநவீன நீர்மூழ்கி கப்பலான சிந்துஷாஸ்ட்ரா நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பலான சிந்துஷாஸ்ட்ரா தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும் நீர்மூழ்கி கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும்  நீர்மூழ்கிக் கப்பல் வந்திருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்மைக் காலமாக வங்காள‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது சீனா-இந்தியா போர் பதற்றத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதையொட்டி, இந்தியத் தரப்பிலும் ராணுவ வலிமையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பீரங்கிகள், அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.