டெல்லியில் கைதான சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வந்தது சிபிசிஐடி..!

டெல்லியில் கைதான சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வந்தது சிபிசிஐடி..!

டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற பாலியல் வழக்கில் சிக்கி சென்னையில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார், இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

1எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவசங்கர் பாபா, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.