போலீசுக்கு தண்ணி காட்ட அடையாளத்தை மாற்றிய சிவசங்கர் பாபா...

பள்ளி மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சாமியார் சிவசங்கர் பாபா கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தனது அடையாளத்தை மறைக்க மொட்டையடித்துக் கொண்டு டேராடூனிலிருந்து டெல்லிக்கு தப்பியிருக்கிறார்.

போலீசுக்கு தண்ணி காட்ட அடையாளத்தை மாற்றிய சிவசங்கர் பாபா...

சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் கூறிய பாலியல் புகாரின் அடிப்படையில் அதன் நிறுவனர் சிவசங்கர்பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று இரவே (ஜூன் 16) சென்னை அழைத்து வரப்பட்டார்.

சிவசங்கர் பாபா மீது சென்னை மாமல்லபுரம் மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவசங்கர்பாபா உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டேராடூனுக்கு  இருப்பதையறிந்த சிபிசிஐடி  போலீசார் அவரை கைது செய்ய டேராடூனுக்கு  விரைந்தனர். இதையடைடுத்து போலீசாரிடமிருந்து தப்புவதற்காக மொட்டையடித்து தன் அடையாளத் மறைத்துக் கொண்டு டெல்லிக்கு தப்பியுள்ளார்.

ஆனாலும் டெல்லி போலீஸ் உதவியோடு நேற்று காலை சிவசங்கரை கைது செய்த தமிழக போலீஸ், நேற்று பகலில் தெற்கு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் சிவசங்கரை ஆஜர்படுத்தியது.

அவர் மீது சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் கூறிய பாலிய புகார்கள், அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை, போக்சோ வழக்குப் பதிவு ஆகியவை குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக போலீஸ், ‘சிவசங்கர் பாபாவை நீதிமன்றக் காவலில் வைத்து தமிழகத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வழக்கு நடத்த வேண்டும்’என்று கோரிக்கை வைத்தது. இதற்கு அனுமதியளித்த டெல்லி நீதிமன்றம் சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அடுத்தடுத்த உத்தரவுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

இதே நேரம் கேளம்பாக்கத்திலுள்ள சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது.