சிவசங்கர் பாபா டெல்லி கோர்ட்டில் ஆஜர்.... சென்னை அழைத்து வர நடவடிக்கை

பாலியல் வழக்கில் கைதான பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிரான்சிஸ்ட் வாரண்ட்  பெறப்பட்ட பின்பு இன்று மாலையே சென்னை அழைத்து வரப்படுகிறார்.

சிவசங்கர் பாபா டெல்லி கோர்ட்டில் ஆஜர்.... சென்னை அழைத்து வர நடவடிக்கை

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக  3 புகார்கள் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சி. பி.சி. ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி. பி திரிபாதி உத்தவிட்டார். 
மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது விசாரணையை சி. பி.சி. ஐ.டி போலீசார் தொடங்கினர்.

இந்நிலையில் சி. பி.சி.ஐ.டி மூலம் 3 தனிப் படைகள் அமைக்க்ப்பட்டு ஒரு குழு சிவசங்கர் பாபாவிடம் விசாரணை மேற்கொள்ள டேராடூன் சென்ற போலீசார் கைது செய்து டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போக்குவரத்து வாரண்ட் பெறப்பட்டு இன்று மாலையே சென்னை அழைத்து வரப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.