எந்தவித சிக்கலுமின்றி சீராக மின்விநியோகம் - செந்தில் பாலாஜி பேச்சு!

எந்தவித சிக்கலுமின்றி சீராக மின்விநியோகம் - செந்தில் பாலாஜி பேச்சு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லாமல் சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பருவ மழை காலத்தில் மின் விநியோகத்தில் எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்க செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு  மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட  உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிக்க: 2021ல் 700 இடங்கள்...ஆனால் 2022ல் வெறும் 40 இடங்கள் தான்...அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சு!

பராமரிப்பு பணிகள் குறித்து பேச்சு:

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி, இதுவரை 14 லட்சத்து 69 பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், 40ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், 32,685 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், 18,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மின் கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதே போல், 18, 380 மின் மாற்றிகள் கையிருப்பு உள்ளதாகவும், 2 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பு உள்ளதாகவும் கூறினார்.

மின் புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டது:

தொடர்ந்து பேசிய அவர், மின் புகார்களை பொறுத்தவரை 99 விழுக்காடு புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள புகார்கள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மின்னகத்தில்  புகார் தெரிவிக்க கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் மழை நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.