திமுக -மதிமுக கூட்டணியில் குழப்பத்த ஏற்படுத்த  சிலர் முயற்சி - வைகோ ஆவேசம்

திமுக -மதிமுக கூட்டணியில் குழப்பத்த ஏற்படுத்த  சிலர் முயற்சிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர்  வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.

திமுக -மதிமுக கூட்டணியில் குழப்பத்த ஏற்படுத்த  சிலர் முயற்சி - வைகோ ஆவேசம்

மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை தாயகத்தில் நடைபெற்றது. வைகோ தலைமையில நடைபெற்ற இந்த கூட்டத்தில்  பல்வேறு  விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கட்சியில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாதவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார். 

மதிமுகவில் இருந்து யாரையும் இழக்க தயாராக இல்லை என குறிப்பிட்ட வைகோ,கட்சியின் எந்தவித கூட்டத்திற்கு வராதவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் பொறுமை காத்து வருவதாக தெரிவித்தார்.

எனினும் அவர்கள் திமுக மதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட ஒரு சிலர் கட்சிக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பி வருவதாகவும் வைகோ கவலை தெரிவித்தார்.