தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்... அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆலோசனை...

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்... அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆலோசனை...

நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய, ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் அதிகம் பயணம் செல்வர் என்பதால், கடந்த ஆண்டைப் போல 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.