திருவண்ணாமலையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்!

திருவண்ணாமலையில் சிறப்பு கண் சிகிச்சை முகாம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், திமுக சார்பில் அனைவரும் பயன்பெறும் வகையில், கண் சிகிச்சை முகம் நடைபெற்றுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கண் சிகிச்சை முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், திமுக மாவட்ட கழக செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த கண் சிகிச்சை முகாமில், கண் பரிசோதனை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

இதில், கண் குறைபாடு உள்ளவர்கள், வயது முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். 

இதையும் படிக்க: நீலகிரியில் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு!