சீரடிக்கு எஸ் ஆர் எம் குழுமம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறதா?

சீரடிக்கு எஸ் ஆர் எம் குழுமம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறதா?

சென்னையில் இருந்து சீரடிக்கு எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். 

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் பி ஆர் குளோபல் ரயில் சேவையை எஸ் ஆர் எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து அறிமுகம் செய்து வைத்தார். 

இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்...சூளுரைத்த சசிகலா!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இருந்து சீரடிக்கு எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் எஸ் ஆர் எம் குழுமம் 4 ரயில்களை நாடு முழுவதும் உள்ள ஆன்மீகம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு இயக்க உள்ளதாக தெரிவித்தார். மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 700 பயணிகள் செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.