6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதிய மருத்துவ கல்லூரி:

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரேடியோ கதிர் இயக்கவியல் துறை தரம் உயர்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். 

தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில்  புதிய மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மண்டவியாவை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 

இதையும் படிக்க: ஓபிஎஸ்சின் எதிர்காலம் இனி...தொடர்ந்து கலாய்த்து பேசும் ஜெயக்குமார்... !

தொடர்ந்து பேசிய அமைச்சர், இம்மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுவதாகவும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் இனி ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் எனவும் கூறினார்.