தவறான செயல்களில் காவல்துறையினர்... ஆணையர் சங்கர்ஜிவால் கடும் எச்சரிக்கை...

சூதாட்டம் போன்ற தவறான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தவறான செயல்களில் காவல்துறையினர்... ஆணையர் சங்கர்ஜிவால் கடும் எச்சரிக்கை...

சூதாட்டம் போன்ற தவறான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக் கூடாது என்று, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அதிகளவிலான பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இத்தகைய தவறான சூதாட்ட செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவதால், அவர்களது குடும்பத்தார் பாதிக்கப்படுவதுடன், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து, சூதாட்டம் போன்ற தவறான செயல்களில் காவல்துறையினர்  ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்வதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

மேலும், இந்த செய்தி அனைத்து காவல் நிலையம் மற்றும் தனிப்பிரிவில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினர்களுக்கும் சென்றடைவதை, ஒருங்கிணைப்பு ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.