பேருந்தின் பின்னால் உள்ள படிக்கட்டில் ஏறி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்...

மதுரை அருகே பேருந்தின் பின்னால் உள்ள படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஏறி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பேருந்தின் பின்னால் உள்ள படிக்கட்டில் ஏறி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்...

 மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குலமங்கலம் செல்லும் பேருந்தில் பள்ளிக்கூட மாணவர்கள் பேருந்தின் பின்னால் இருக்கும் படியில் நின்று ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பேருந்துக்குள் கூட்டம் இல்லாத பொழுதும் கூட பேருந்தின் படிக்கட்டில் தொங்கி செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் தற்சமயம் அதனையும் மீறி ஆபத்தை விளைவிக்கும் வகையில், பேருந்தின் பின்னால் இருக்கும் படிக்கட்டில் ஏறி தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர்.  இதனை அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.