மதிய உணவில் மாணவர்களுக்கு காலாவதியான முட்டைகளை வழங்கிய பள்ளி நிர்வாகம்!! சிகிச்சையில் குழந்தைகள்

மதிய உணவில் மாணவர்களுக்கு காலாவதியான முட்டைகளை வழங்கிய பள்ளி நிர்வாகம்!! சிகிச்சையில் குழந்தைகள்

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் தொடக்க பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அத்தியாநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுமார் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு இன்று மதியம் உணவு சாப்பிட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து  திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால்  பரபரப்பு  நிலவியது. இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதிய உணவில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட முட்டை காலாவதியாகி இருந்தது தெரியவந்துள்ளது.