சத்துணவுக் கூடத்தில் திடீர் தீ விபத்து... பள்ளி திறந்த முதல்நாளிலேயே பரபரப்பு...

நத்தம் அருகே தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சத்துணவுக் கூடத்தில் திடீர் தீ விபத்து... பள்ளி திறந்த முதல்நாளிலேயே பரபரப்பு...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி பாலப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2 கட்டிடங்களில் செயல்படுகிறது. இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அப்பொழுது  சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டர் இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நத்தம் தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் உடனடியாக சத்துணவு மையத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.  இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பள்ளிகள் தொடங்கப்பட்ட முதல் நாளே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.