சூப்பர் ல.. இரண்டாவது நாளாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.. தமிழகத்தின் பிடியை விட தொடங்கும் கொரோனா!!
தமிழகத்தில் இரண்டாவது நாளாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரேனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 105 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 39 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிருதுத 301 ஆக குறைந்துள்ளது. 265 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கொரோனா தொற்று பாதிப்பினால் நேற்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 23 ஆக உள்ளது.