43 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்... கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. திறந்து வைத்தார்...

கமுதியில் 43 இடங்களில், பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட எஸ்.பி. கார்த்திக் திறந்து வைத்தார்.

43 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்... கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. திறந்து வைத்தார்...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலும், 43 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கோட்டை மேடு பகுதியிலிருந்து வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பொருத்தப்பட்ட இந்த சி.சி.டி.வி. கேமராக்களின், கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. கார்த்திக் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, 
ராமநாதபுரம்-விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்து உள்ள மாவட்ட காவல் துறை சோதனை சாவடியையும் அவர் திறந்து வைத்தார்.