”ஓபிஎஸ் -ன் மனைவியின் இறப்பில் சந்தேகம்; தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” - அதிமுக மகளிர் அணி

”ஓபிஎஸ் -ன் மனைவியின் இறப்பில்  சந்தேகம்;  தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” -  அதிமுக மகளிர் அணி

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி அதிமுக கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்திய ஓ பன்னீர் செல்வம் தரப் பினர் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எம்.பாலசந்திரன் தலைமையிலான அதிமுகவினர்  புகார் அளித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பாலசந்திரன்  கூறுகையில்:-  

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஓ பிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் எனவும்,  இதனை  கண்டித்து தலைமை உறுப் பினர்கள் ஆலோசனையின் படி புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் ” திமுக தூண்டலின் பேரில் ஓ பிஎஸ் தரப் பினர் கொடநாடு குறித்து பேசி வருகின்றனர். ஓ பிஎஸ் அணி, திமுகவின் பீ-டீம் ஆக செயல்பட்டு வருகின்றது. இதற்கு இவர்கள் திமுக வின் கொடிகளையே பயன்படுத்திக்கொள்ளலாம்”,   என்று விமர்சித்தார்.

அப்போது,  செய்தியாளர்கள் புகாரில் ஒ. பி.எஸ் பெயர் குறிப் பிடவில்லை என்று எழுப் பிய கேள்விக்கு :- 
” ஒ. பி.எஸ் தரப் பினர் என்றால்  அவரையும் உள்ளடகியது தான் பொருள்”,  என்று விளக்கினார்.

அப்பொழுது அங்கிருந்த மகளிர் அணி செயலாளர் கோகிலா திடீரென  ஓ பிஎஸ் -ன் மனைவியின் இறப் பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததால் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிக்க    |  "நிர்மலா சீதாராமன் ஒரு போலி அமைச்சர்" ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம்!!