குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ள ஆளுநர் ரவி!

குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ள ஆளுநர் ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ரவி தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யவிருக்கிறார்.

இரண்டு நாள் பயணமாக கன்னியாகுமரியில்  சுற்றுப் பயணம் மேற்கொள்ள விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். 

குடும்பத்துடன் சென்றுள்ள ஆளுநர், தூத்துக்குடியிலிருந்து கார் மூலம் கன்னியாகுமரி சென்று மாலையில் சூரிய அஸ்தமனக் காட்சியை கண்டு ரசிக்கிறார். நாளை விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று தியானம் செய்கிறார்.

பின்னர் மதியம் 2 மணியளவில் அவர் சென்னை புறப்படுகிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || லஞ்சம் கொடுக்காமல், தட்டி கேட்ட ஓட்டுனர்... ஆத்திரத்தில் தாக்கிய வனத்துறை ஊழியர்!!