குட்கா முறைகேடு.. 12 பேர் மீது வழக்கு பதிவு - சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி!!

குட்கா முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குட்கா முறைகேடு.. 12 பேர் மீது வழக்கு பதிவு - சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி!!

கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்:

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா , மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்புக்கு சிபிஐ கடிதம்:

இந்த நிலையில், இவ்விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா, ஓய்வுபெற்ற டிஜிபி டி. ராஜேந்திரன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை  செய்ய அனுமதி கோரி தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்புக்கு சிபிஐ கடிதம் எழுதியது.

தமிழக முதலமைச்சர் அனுமதி:

மாநில அரசிடம் அனுமதி பெற்றுத் தான் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் அந்த சிபிஐ கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கி அது தொடர்பாக கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.