அதிவேகமாக வாகனம் ஓட்டிய டிடிஎஃப் வாசனுக்கு அபராதம்!

அதிவேகமாக வாகனம் ஓட்டிய டிடிஎஃப் வாசனுக்கு அபராதம்!

அதிவேகமாக வாகனத்தை இயக்கிய பிரபல டிடிஎஃப் வாசனுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர் முக்கிய சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது அவரது வாகனத்தை முந்திக்கொண்டு  ஒரு பைக் வேகமாக சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக அனைத்து காவலர்களுக்கும் மைக் மூலம் அதிவேகமாக வரும் பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை இடுமாறு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து வாகனம் உதகை, தலை குந்தா அருகே HPF என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது வாகனத்தை காவல் காவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது வாகனத்தை ஓட்டி வந்தவர் டிடிஎப் வாசன் என்பது தெரியவந்தது. மேலும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் டிடிஎஃப் வாசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அங்கிருந்து காவலர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே பலமுறை தன்னுடைய பைக்கை அதி வேகமாக இயக்கிய டிடிஎஃப் வாசனின் மேல் பல வழக்குகள் இருந்தும் பைக் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தும் மீண்டும் பைக்கை வேகமாக இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:"திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள்" மு.க.ஸ்டாலின் விளாசல்!