தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி..!

தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி..!

தமிழ்நாடு நாள்:

மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்திற்கு, 1967 ம் ஆண்டு ஜூலை 18 ம் தேதி மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என பெயர்சூட்டினார். மெட்ராஸ் என இருந்ததை தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்ட அந்த தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.    

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: 

தமிழகத்தில் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை துறையின் சார்பில் தமிழ்நாடு திருநாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு முன் மெட்ராஸ் என இருந்த பொழுது இருந்த நில வரைபடங்கள், தமிழ்நாட்டின் சிறப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 1806ம் ஆண்டு சர் வில்லியம் லாம்பிடன் சென்னை மற்றும் கோவையில் ஆய்வு மேற்கொண்ட ஓவியங்கள், பழங்காலத்தில் உபயோகிக்கப்பட்ட நில அளவை கருவிகளின் புகைப்படங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.