2020ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் : நீர் மேலாண்மையில் 3ஆவது இடம் பிடித்த தமிழகம் இடம்!!

2020ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

2020ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் : நீர் மேலாண்மையில் 3ஆவது இடம் பிடித்த தமிழகம் இடம்!!

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ஒட்டு மொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை ராஜஸ்தானும், மூன்றாவது இடத்தை தமிழகமும் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் பஞ்சாயத்து 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.  

சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மதுரை மாநகராட்சி மூன்றாவது இடமும், சிறந்த பள்ளிகள் பிரிவில் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த தொழில் பிரிவில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தமிழ்நாடு 2ம் இடத்தையும், சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா 2ம் இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கான விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.