தமிழகத்திற்கு வந்தது கோவாக்சின்… முதல் டோஸ் போட்டவர்கள் நிம்மதி!!

தமிழ்நாட்டிற்கு  மேலும் 90,000  டோஸ் கோவாக்சீன்  தடுப்பூசிகள் 18  பாா்சல்களில் ஹைதராபாத்திலிருந்து  விமானத்தில் இன்று காலை  சென்னை வந்து சோ்ந்தன.

தமிழகத்திற்கு வந்தது கோவாக்சின்… முதல் டோஸ் போட்டவர்கள் நிம்மதி!!

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு   வலியுறுத்தி வருகிறது. அதிலும் 3 வது அலையிலிருந்து தப்பிக்க  2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால், பொதுமக்களும் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில்  தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதினார். தொடர்ந்து தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்ரமணியம்,மத்திய  சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தவுள்ளார்.

இதற்கிடையே மத்திய அரசு தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகளை மட்டுமே தமிழகத்திற்கு அனுப்பியது. கோவாக்சீன் தடுப்பூசிகள் கடந்த ஒரு மாதமாக தமிழகத்திற்கு வரவில்லை. இதனால் ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் போட்டவா்கள், இரண்டாவது டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் போட முடியாமல், கோவாக்சீன் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு   தவித்தனா். இதனால் தமிழ்நாடு அரசு,   அரசிடம் கோவாக்சீன் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு உடனே அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஹைதராபாத்திலிருந்து இன்று காலை 9.15 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 90,000 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 18 பாா்சல்களில் சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது.

சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த  தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து  கீழே இறக்கினா். இதையடுத்து உடனடியாக  சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு துறை  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனா். அங்கிருந்து தமிழகம் முழுவதற்கும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.