தலைமை செயலகத்தில் "தமிழ் வாழ்க" பெயர் பலகை

சென்னை தலைமை  செயலகத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் "தமிழ் வாழ்க" என்னும் வாசகம் அடங்கிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் "தமிழ் வாழ்க" பெயர் பலகை

சென்னை தலைமை  செயலகத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் "தமிழ் வாழ்க" என்னும் வாசகம் அடங்கிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா  கொண்டாடப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதேப்போல், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ படத்தினை திறந்து வைக்க உள்ளார்.  குடியரசு தலைவர் தலைமை செயலகம் வர உள்ள நிலையில  2 மற்றும் 3ம் எண் நுழைவுவாயில் கட்டிடத்தின் மேல்புறத்தில்  "தமிழ் வாழ்க" என்னும் வாசகம் அடங்கிய 2 பெயர் பலகைகள் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.