நெடுந்தீவில் சிக்கிய தமிழ் நாட்டு மீனவர்கள்!

நெடுந்தீவில் சிக்கிய தமிழ் நாட்டு மீனவர்கள்!

ராமேஸ்வரம்: இலங்கை நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகு 9 மீனவர்களுடன் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று 558 விசைப்படகுகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அப்பொழுது, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மொத்தம் 9 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்பொழுது இன்ஜினில் பழுது ஏற்பட்டு நெடுந்தீவு கடற்கரையில் கரையொதிங்கியுள்ளனர். 

அங்கு வந்த இலங்கை கடற்படை அவரைகளைப் பிடித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இன்ஜின் கோளாறு காரணமாக தமிழக விசைப்படகு  கரை ஒதுங்கியதா அல்லது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா என்ற கோணத்தில், தீவிரமாக இலங்கை கடற்படை நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து அவர்களிடம்  விசாரணையில்  ஈடுபட்டு வருகின்றனர், என அறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: திடீா் வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை!