வட மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள்... அதிரடி பின்னணி!

வடமாநிலங்களில் கொத்தடிமைகளாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் கண்டறியப்பட்ட 38 பேர் காவல்துறை உதவியுடன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

வட மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள்... அதிரடி பின்னணி!

வடமாநிலங்களில் கொத்தடிமைகளாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் கண்டறியப்பட்ட 38 பேர் காவல்துறை உதவியுடன் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற பகுதியில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமைகளாகவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் கண்டறியப்பட்ட 38 பேர் தமிழக காவல்துறை உதவியுடன்  தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னை சென்ட்ரலுக்கு ரயில் மூலமாக அழைத்து வரப்பட்ட அவர்கள் தமிழக காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில்  குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலருக்கு மனநலம் பாதிப்பு இருந்ததால் அவர்கள் அனைவரும் சென்னையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.