டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்... ஹசன் மெளலானா!!!

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்... ஹசன் மெளலானா!!!

சட்டப்பேரவையில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச் சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என கூறிய அவர், ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.  இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  மாணவர்களின் தேவைக்கேற்ப கல்லூரிகளில் அமைப்பதற்கு.... அமைச்சர் பொன்முடி!!