தென்காசி: இபிஎஸ் கண்டன அறிக்கையின் எதிரொலியக சிலமணி நேரத்தில் வந்த குடிநீர் விநியோகம்...!

தென்காசி:  இபிஎஸ் கண்டன அறிக்கையின் எதிரொலியக   சிலமணி நேரத்தில் வந்த குடிநீர் விநியோகம்...!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கண்டனத்தால் சில மணி நேரத்தில் தண்ணீர் வந்ததால், பட்டியல் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெங்கடாம்பட்டி 6-வது வார்டில் அருந்தியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 21 மற்றும் 22-ம் நிதியாண்டில், 5.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.

பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டன அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிக்க  |  ” திமுகவின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது “ - இபிஎஸ் சாடல்.